Wednesday 24 December 2014

வழியனுப்ப மனமில்லாமல் கண்ணீருடன் முடிந்தது இறுதி சடங்கு!

கே.பி அவர்களின் மரணம் தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த செய்தி அறிந்த பல திரை நட்சத்திரங்கள் நேரில் சென்று தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
இந்நிலையில் இவரது உடல் இன்று மதியம் ஊர்வலமாக புறப்பட்டு சென்னை பெசண்ட் நகர் மயானம் வந்து அடைந்தது. வழி நடுவே ஏராளமான மக்கள் கூடி தங்கள் வருத்தங்களை தெரிவித்தனர்.
இறுதியாக மாலை 5.30 மணியளவில் அவரது உடல் எரிக்கப்பட்டுது. இதில் கடைசி வரை நடிகர் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், விவேக் இயக்குனர் அமீர், வசந்த் ஆகியோர் கண்ணீருடன் தங்கள் குருநாதரை வழி அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment